கட்டம் கட்டமாகவே இனி நிதியொதுக்கீடு: பசில் - sonakar.com

Post Top Ad

Tuesday 12 October 2021

கட்டம் கட்டமாகவே இனி நிதியொதுக்கீடு: பசில்

 


அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒரு வருடத்துக்கான நிதியொதுக்கீடு செய்யும் முறைமையை மாற்றியமைக்கப் போவதாக தெரிவிக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.


2022 வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒவ்வொரு காலாண்டுக்கான நிதியே வழங்கப்படும் எனவும், அபிவிருத்தி நடவடிக்கைகள் திருப்திகரமான முறையில் இருப்பதை உறுதி செய்த பின்னரே அடுத்த காலாண்டுக்கான நிதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கிறார்.


உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார திட்டங்களுக்கென பிரத்யேக நிதியொதுக்கீடு செய்யப் போவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment