இலங்கை மல்யுத்த முகாமையாளர் நோர்வேயில் தலைமறைவு - sonakar.com

Post Top Ad

Sunday 10 October 2021

இலங்கை மல்யுத்த முகாமையாளர் நோர்வேயில் தலைமறைவு

 


17வது உலக மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்காக நோர்வேக்கு அனுப்பப் பட்ட இலங்கை அணியின் முகாமையாளர் அங்கு தலைமறைவாகியுள்ளார்.


முகாமையாளர் இல்லாத நிலையில் ஏனையோர் இன்று நாடு திரும்பியுள்ள அதேவேளை இதுவரை 44 மல்யுத்த வீரர்கள் இவ்வாறு வேறு நாடுகளுக்குச் சென்றவுடன் தலைமறைவாகியுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மல்யுத்த சங்கத்தின் தலைவர் சரத் ஹேவாவிதாரன தெரிவிக்கிறார்.


இம்முறை தலைமறைவாகியுள்ள டொனால்ட் இந்ரவம்ச மீது திருட்டுக் குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment