சஜித்துக்கு 'மூளைப்' பழுது: அநுர குமார விசனம்! - sonakar.com

Post Top Ad

Monday 13 September 2021

சஜித்துக்கு 'மூளைப்' பழுது: அநுர குமார விசனம்!

 


நாடு இருக்கும் நிலையில் ஆட்சியைக் கலைத்து விட்டு தேர்தலை நடாத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ள கருத்தானது அவருக்கு மூளையில் ஏதோ 'பழுது' இருப்பதை வெளிக்காட்டுகிறது என விசனம் வெளியிட்டுள்ளார் அநுர குமார திசாநாயக்க.


இவ்வாறான சூழ்நிலையில் அரசுக்கு முறையான அழுத்தங்களை உருவாக்கி நாட்டின் நலனை முன்நிறுத்த வேண்டுமே தவிர, மட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடக் கூடாது என அநுர மேலும் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் வெகுவாக மக்கள் ஆதரவை இழந்திருப்பதாகவும் தெரிவிக்கும் அவர், இருப்பினும் எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் அடைவதற்கான தருணம் இதுவல்ல என தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment