குடி போதையில் 'அமைச்சர்' சிறைச்சாலைக்குள் அடாவடி - sonakar.com

Post Top Ad

Monday 13 September 2021

குடி போதையில் 'அமைச்சர்' சிறைச்சாலைக்குள் அடாவடி

 


குடிபோதையில் இராஜாங்க அமைச்சர் ஒருவரு வெலிகடை சிறைச்சாலைக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.


குறித்த நபர் துப்பாக்கி வைத்திருந்ததுடன் அதீத போதையில் இருந்த நண்பர்கள் குழுவொன்றுடன் சிறைச்சாலைக்குள் பலாத்காரமாகப் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தனது நண்பர்களுக்கு சிறைச்சாலையை 'சுற்றிக் காட்ட' அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், சிறைச்சாலை நிர்வாகம் இத்தகவலை மறுத்துள்ளது.

No comments:

Post a Comment