மதுக்கடைகளை திறந்தால் தினசரி 500 கோடி வருமானம்: MP - sonakar.com

Post Top Ad

Tuesday 21 September 2021

மதுக்கடைகளை திறந்தால் தினசரி 500 கோடி வருமானம்: MP

 


மதுக்கடைகளை திறந்து வைத்தால், அரசுக்கு தினசரி 500 கோடி ரூபா வருவாய் கிடைக்கும் என கணக்கு வெளியிட்டுள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அகில சாலிய.


அதற்காக, மதுசாலைகளைத் திறந்து வைக்க வேண்டும் என்று தான் கோரவில்லையாயினும், நாட்டின் பொருளாதார சூழ்நிலையையும் கருத்திற் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பவர்களே திறந்ததும் வரிசையில் முன் நிற்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment