திருமண நிகழ்வில் 10 பேருக்கே அனுமதி! - sonakar.com

Post Top Ad

Thursday 30 September 2021

திருமண நிகழ்வில் 10 பேருக்கே அனுமதி!

 


நாளை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் அதேவேளை, புதிய சுகாதார விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், திருமண நிகழ்வொன்றில் 10 பேருக்கே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் ஒக்டோபர் 16ம் திகதியிலிருந்து அது 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கொவிட் அல்லாத மரண சடங்குகளில் 16ம் திகதி வரை 10 பேருக்கு கலந்து கொள்ள  அனுமதியும் 16ம் திகதியின் பின்னர் 15 பேர் அனுமதிக்கப்பட்டுளளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒக்டோபர் 31ம் திகதிக்குப் பின்னரான விதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment