கொழும்பில் 'குண்டு' புரளி பற்றி பொலிசார் தீவிர விசாரணை - sonakar.com

Post Top Ad

Saturday 7 August 2021

கொழும்பில் 'குண்டு' புரளி பற்றி பொலிசார் தீவிர விசாரணை

 


கொழும்பு நகரில், குறிப்பாக இரு நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் வெள்ளவத்தை, பம்பலபிட்டி, தெஹிவளை, நுகேகொட உட்பட்ட பகுதிகளில் குண்டு வெடிப்பு இடம்பெறவுள்ளதாக சமூக வலைத்தளம் ஊடாக நேற்று மாலை  பரவிய வதந்தி தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடாத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.


ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பரப்பப்பட்ட சமூக வலைத்தள பதிவொன்றையே மீண்டும் எடிட் செய்து இவ்வாறு பகிர்ந்துள்ளதாக இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, இந்த தகவலில் எவ்வித உண்மையுமில்லையெனவும் தேசிய பாதுகாப்பு உறுதியாக உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment