நாட்டை மூடுங்கள்: அஸ்கிரி பீடம் கோரிக்கை! - sonakar.com

Post Top Ad

Thursday 19 August 2021

நாட்டை மூடுங்கள்: அஸ்கிரி பீடம் கோரிக்கை!

 


கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் தாமதிக்காது நாட்டை மூடுமாறு அஸ்கிரி - மல்வத்த பீட மகாநாயக்கர்கள் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, பிரதமருக்கும் கடிதத்தின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தினசரி நூற்றுக்கணக்கான 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டு வருகின்றமையும், நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்திற் கொண்டு முடக்க முடியாது என ஜனாதிபதி விளக்கமளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment