ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை - sonakar.com

Post Top Ad

Friday, 20 August 2021

demo-image

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

 

HavSokA


நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையின் பின்னணியில் இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கிறது.


இதற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த தடவை ஜனாதிபதியின் தொலைக்காட்சி உரை பாரிய விமர்சனங்களுக்குள்ளாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.


கொரோனா பெருந்தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமுலுக்குக் கொண்டு வருமாறு பல முனைகளிலிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு நாட்டு மக்களுக்கு 'உரை' நிகழ்த்த முடிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment