தினசரி 1000 மரணம்; பொன்சேகா எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Friday 13 August 2021

தினசரி 1000 மரணம்; பொன்சேகா எச்சரிக்கை!

 


நாடு போகும் நிலையில் செப்டம்பர் அளவில் தினசரி 1000 மரணங்கள் நிகழக்கூடிய அபாயமிருப்பதாக எச்சரிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா.


அதற்கு முன்பாக, தேவையான நடவடிக்கையை முன்னெடுத்து மக்களின் உயிர்களைக் காப்பாற்றியாக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இராணுவ மயப்படுத்தி சுகாதார நிபுணர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment