நாட்டைக் காப்பாற்றும் 'முறை' தெரியும்: பவித்ரா - sonakar.com

Post Top Ad

Wednesday 23 June 2021

நாட்டைக் காப்பாற்றும் 'முறை' தெரியும்: பவித்ரா

 


கொரோனா முதலாம் மற்றும் இரண்டாம் அலையின் போது நாட்டைக் காப்பாற்றியது போன்று மூன்றாவது அலையின் போதும் நாட்டைக் காப்பாற்றும் முறை அரசுக்குத் தெரியும் என்கிறார் பவித்ரா வன்னியாராச்சி.


கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் வர்த்தக நிலையங்கள் மீது அபராதம் விதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், சுகாதாரத்துறையினர் இன்னும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என தெரிவிக்கிறார்.


எனினும், இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய ரணில், நாட்டின் கொரோனா கட்டுப்பாடு முழுமையாக கை மீறியுள்ளதாகவும் இராணுவத்தின் தலையீடு ஏற்புடையது அன்று எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment