மாற்ற முடியாத '19' மீள வரும்: ரணில் உறுதி! - sonakar.com

Post Top Ad

Saturday 26 June 2021

மாற்ற முடியாத '19' மீள வரும்: ரணில் உறுதி!

 


சர்வாதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டம் தற்போது நடைமுறை அரசினால் திருத்தப்பட்டு 20ம் திருத்தச் சட்டம் ஊடாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள போதிலும் மீண்டும், இனி ஒரு போதும் எதிர்காலத்தில் மாற்ற முடியாத வகையில் 19ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதே தமது அரசியல் இலக்கு என்கிறார் ரணில் விக்கிரமசிங்க.


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள அவர், புதிய வியூகம் அமைத்து பயணிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.


அவரது முதல் நாள் நாடாளுமன்ற உரை வெகுவாக அனைவரையும் கவர்ந்திருந்த அதேவேளை, அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முற்றாக தோல்வியடைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்ததன் பின்னணியில் நேற்றைய தினம் ஜனாதிபதி நீண்ட விளக்கவுரை வழங்கும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.


இந்நிலையில், மீண்டும் எதிர்காலத்தில் மாற்றவே முடியாத படி 19ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாக வேண்டும் என ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment