ஒக்சிஜன்: NGOக்களின் உதவியை நாடும் அரசு - sonakar.com

Post Top Ad

Saturday 22 May 2021

ஒக்சிஜன்: NGOக்களின் உதவியை நாடும் அரசு

 


கொரோனா பரவல் தீவிரத்துடன் ஒக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதற்கான உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவி நாடப்பட்டுள்ளது.


அரச சார்பற்ற நிறுவங்களிடம் இதற்கான நிதியுதவி எதிர்பார்க்கப்படுவதன் பின்னணியில் நாட்டில் இயங்கும் முக்கிய அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இது குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம் தெரிவிக்கிறது.


வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதி பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment