ஒரு வாரத்திற்கு 'அவசர' வழக்குகள் மாத்திரமே: உ.நீதிமன்றம் - sonakar.com

Post Top Ad

Thursday 6 May 2021

ஒரு வாரத்திற்கு 'அவசர' வழக்குகள் மாத்திரமே: உ.நீதிமன்றம்

 


இன்று முதல் மே மாதம் 14ம் திகதி வரை அவசர வழக்குகளை மாத்திரமே விசாரிக்கத் தீர்மானித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


கொழும்பில் நிலவும் கொரோனா அபாய சூழ்நிலையின் பின்னணியில் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் சில இடங்களில் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.


மேன்முறையீட்டு நீதிமன்றமும் எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு அவசர வழக்குகளை மாத்திரமே விசாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment