வெளிநாட்டில் வாழ்ந்து வந்த சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை சவுதி முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் முஹம்மதின் நேரடி உத்தரவிலேயே இடம்பெற்றதாக அறிவித்துள்ளது அமெரிக்கா.
2018 ஒக்டோபரில் கொலையான ஜமால், சவுதி அரச குடும்பத்தை வெகுவாக விமர்சித்து ஆக்கங்களை வெளியிட்டு வந்தவராவார்.
அவரை உயிருடன் பிடிக்க முடியாவிடின் கொலை செய்யுமாறு சல்மான் பின் முஹம்மத் உத்தரவிட்டதாகவும் அவரது கட்டுப்பாட்டுக்குள் உள்ள இரகசிய பிரிவினரே இதன் பின்னணியில் உள்ளதாகவும் அமெரிக்கா தமது 'புலனாய்வின்' அடிப்படையில் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment