சீனாவுக்கு முக்கியத்துவம்; இந்தியா அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Monday 8 February 2021

சீனாவுக்கு முக்கியத்துவம்; இந்தியா அதிருப்தி!

 


இலங்கையில் அண்மைக்காலமாக சீன நிறுவனங்கள் அதிகளவிலான வாய்ப்புகளைப் பெறுவதைக் கொண்டு இந்தியா தொடர்ச்சியான அதிருப்தியை வெளியிட்டு வருகிறது.


யாழ் தீபகற்ப பகுதிகளில் புத்தாக்க எரி சக்தி திட்டங்களுக்கான இந்திய நிறுவனங்களின் கேள்வி நிராகரிக்கப்பட்டு, சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளமை மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தமது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய இடையூறாக இருப்பதாக இந்தியா அச்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment