மாகாண சபை தேர்தல்களை நடாத்துவது குறித்து ஆராய்வு - sonakar.com

Post Top Ad

Sunday 28 February 2021

மாகாண சபை தேர்தல்களை நடாத்துவது குறித்து ஆராய்வு

 


மாகாண சபைத் தேர்தல்களை இவ்வருடம் நடுப்பகுதியில் நடாத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொரோனா சூழ்நிலையில் இவ்வருடம் தேர்தலை நடாத்த முடியாது என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும்,  தற்போது அது குறித்து பெரமுன தரப்பு ஆராய்ந்து வருவதுடன் எதிர்வரும் வாரம் முக்கிய பேச்சுவார்த்தைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.


தற்சமயம் ஆளுனர்களின் கட்டுப்பாட்டிலேயே மாகாண சபைகள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment