பாணந்துறை: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி - sonakar.com

Post Top Ad

Monday 25 January 2021

பாணந்துறை: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

 


முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பாணந்துறையில் இடம்பெற்றுள்ளது.


பல்லேமுல்ல பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment