சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Saturday 30 January 2021

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை ஆரம்பம்

 


எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.


3ம் திகதி வரை ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், சுதந்திர சதுக்கம் பகுதியில் காலை 6 மணி முதல் பி.ப 1.30 வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் பேணப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


கட்டாய ஜனாஸா எரிப்பு உட்பட்ட மனித உரிமை மீறல்களின் பின்னணியிலான சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment