மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு: எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday 19 January 2021

மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு: எச்சரிக்கை

 


நாட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டு வெகுவாக அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.


இன்று காலை 6 மணியுடனான கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் ஆறு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் டி.ஐ.ஜி அஜித் ரோஹன.


புத்தளம், கட்டுகஸ்தொட்ட, குருநாகல, எம்பிலிபிட்டிய உட்பட்ட இடங்களில் அண்மைய திருட்டு நடந்துள்ள அதேவேளை நாடளாவிய ரீதியில் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment