அத்துராலியே ரதன தேரர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நீண்ட நாள் இழுபறிக்குள்ளாகியிருந்த அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாகவே அவர் மீண்டும் நாடாளுமன்றம் நுழைந்துள்ளார். இப்பதவிக்காக காத்திருந்த ஞானசார இவ்விடயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
குறித்த தேசியப் பட்டியலின் பின்னணியில் ஆட்கடத்தல், தாக்குதல்கள் என பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment