கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை எரிப்பது எனும் இலங்கை அரசின் தீர்மானம் முற்று முழுதான அரசியல் முடிவென தெரிவித்துள்ளார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இந்த முடிவில் எந்த விஞ்ஞானமும் இல்லையென தெரிவிக்கின்ற அவர், முழுக்கவும் அரசியல் சார்ந்த இம்முடிவு இனவாத நடவடிக்கை எனவும் விளக்கமளித்துள்ளார்.
உலகில் சீனாவைத் தவிர அனைத்து நாடுகளிலும் உடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு அனுமதித்துள்ள நிலையில் இலங்கையின் இனவாத அடிப்படையிலேயே கட்டாய எரிப்புத் தீர்மானம் கடைப்பிடிக்கப்படுவதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment