மாகாண சபை தேர்தல்களை நடாத்துவதற்கான முயற்சிகளை அரசு முன்னெடுத்து வரும் நிலையில் கட்சித் தலைவர்கள் இன்று இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மாகாண சபைத் தேர்தல்களை இக்கால கட்டத்தில் நடாத்துவது அவசியமில்லையென பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பௌத்த உயர் பீடங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment