மாத்தறை - திக்வெல்லயில் இரு இடங்கள் கொரோனா அவதானத்தின் பின்னணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யோனகபுர கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அட்டுலுகம போன்று இங்கும் பொது மக்கள் ஒத்துழையாமை இருப்பதாகவும் இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார்.
அட்டுலுகமயில் நான்கில் ஆரம்பித்து 800 கொரோனா தொற்றாளர்கள் வரை கண்டறியப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment