சா'மருது ACJUவின் விழிப்புணர்வு பிரச்சாரம் - sonakar.com

Post Top Ad

Wednesday 30 December 2020

சா'மருது ACJUவின் விழிப்புணர்வு பிரச்சாரம்

 


சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்த கொவிட்-19 ஆத்மீக விழிப்புணர்வு  பிரச்சார நடவடிக்கை  புதன்கிழமை (30) மாலை மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எம். சலீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு மாளிகைக்காடு பிரதேசம் முழுவதிலும் நடைபெற்றது.


ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஆத்மீக சொற்பொழிவை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாபா ரஷாதி, மாவடிப்பள்ளி அஸ்-ஸஹ்தி அரபுக்கல்லூரி முதல்வர் மெளலவி யூ. எல்.எம். முபாறக் ஆகியோர் நிகழ்த்தினர்.


இந்த விழிப்புணர்பு பிரச்சார நடவடிக்கையில் மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை உலமாக்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகவும் வர்த்தகநிலையங்களிலும் விநியோகித்தனர். இதனை தொடர்ந்து சுனாமி வீட்டுத்திட்டமான பொலிவேரியன்  கிராமத்திலும் இவ்விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 


-நூருல் ஹுதா உமர்

No comments:

Post a Comment