இன்றைய தினம் (23) இலங்கையில் 348 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 276 பேர் பேலியகொட மீன் சந்தைக் கொத்தனியோடு தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், முன்னதாக மினுவங்கொட - பேலியகொட கொத்தனி முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்சமயம் 8573 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment