தப்பிச் சென்ற 'பெண்'ணை பிடித்து விட்டோம்: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Sunday 22 November 2020

தப்பிச் சென்ற 'பெண்'ணை பிடித்து விட்டோம்: பொலிஸ்

 


கொரோனா தொற்றின் நிமித்தம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றிருந்த பெண்ணை பிடித்து விட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


25 வயதான குறித்த பெண் போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்திருந்த நிலையில் தீவிர தேடலின் பின்னணியில் எஹலியகொட பகுதியில் மறைந்திருந்தவரை நேற்றிரவு பிடித்து மீண்டும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தனது குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு தப்பியோடியிருந்த பெண்ணை வியாழன் முதல் பொலிசார் தேடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment