நேற்றைய தினம் 473 தொற்றாளர்கள்: கொழும்பு முன்னிலை! - sonakar.com

Post Top Ad

Saturday 28 November 2020

நேற்றைய தினம் 473 தொற்றாளர்கள்: கொழும்பு முன்னிலை!

 



நேற்றைய தினம் நாட்டில் 473 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை கொழும்பு மாவட்டத்திலிருந்தே அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர்.


பொரளை பகுதியிலிருந்து 42 பேரும் மட்டக்குளி பகுதியிலிருந்து 32 பேரும் கிரான்ட்பாஸ் பகுதியிலிருந்து 11 பேரும் உள்ளடங்கலாக மொத்தம் 138 பேர் கொழும்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


கண்டி, கேகாலை, மொனராகலை, யாழ்ப்பாண மாவட்டங்களிலிருந்தும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment