நேற்று கொழும்பிலிருந்து 168; கம்பஹா 157 - sonakar.com

Post Top Ad

Friday 6 November 2020

நேற்று கொழும்பிலிருந்து 168; கம்பஹா 157

 


நேற்றைய தினம் 383 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில், கொழும்பிலிருந்து 168 பேரும் கம்பஹாவிலிருந்து 157 பேருகும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள அதேவேளை களுத்துறை மாவட்டத்திலிருந்து 24 பேரும் கேகாலையில் 06 மற்றும் மாத்தறையில் ஐவரும் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.


எனினும், தொடர்ந்து சமூக மட்டத்திலான பரவல் இல்லையெனவும் எதிர்வரும் திங்கள் மேல் மாகாண ஊரடங்கை நீக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment