மேல் மாகாணத்திலிருந்து 10000 தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Friday 13 November 2020

மேல் மாகாணத்திலிருந்து 10000 தொற்றாளர்கள்

 


கடந்த ஐந்து வார கால பகுதியில் மேல் மாகாணத்திலிருந்து மாத்திரம் 10045 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


மினுவங்கொட - பேலியகொட கொத்தனியிலிருந்தே தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அறியப்படுவதாகவும் சமூக மட்டத்திலான பரவல் இல்லையெனவுமே அரசு தொடர்ந்தும் தெரிவித்து வருகிறது.


மார்ச் முதல் இதுவரை இலங்கையில் 15723 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் தற்சமயம் 5022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment