மதுஷிடம் தகவல் பெற்று 10 கிலோ ஹெரோயின் மீட்பு - sonakar.com

Post Top Ad

Saturday 17 October 2020

மதுஷிடம் தகவல் பெற்று 10 கிலோ ஹெரோயின் மீட்பு

 


பாதாள உலக பேர்வழி மாகந்துரே மதுஷிடம் தகவல் பெற்று கோகிலாவத்தை பகுதியிலிருந்து 10 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


டுபாயில் கைதாகி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைதான மதுஷ், இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதான நபர் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதேவேளை பின் நாட்களில் சிறையிலிருந்தே இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் வழி நடாத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் மதுஷ், வெலே சுதா போன்ற நபர்கள் சிறையிலேயே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment