தீப்பற்றிய கப்பலில் எண்ணைக் கசிவு இல்லை: கடற்படை - sonakar.com

Post Top Ad

Friday 4 September 2020

தீப்பற்றிய கப்பலில் எண்ணைக் கசிவு இல்லை: கடற்படை


கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றியுள்ள எம்.வி. நியு டயமன்ட் கப்பலில் இதுவரை எண்ணைக் கசிவு எதுவுமிலலையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


நீரோட்டத்தினால் தென்பகுதி நோக்கி நகர்ந்து வரும் கப்பல் இலங்கைக் கரையிலிருந்து 22 கடல் மைல் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை கப்பலில் கச்சா எண்ணை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்கு தீ பரவவில்லையெ தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, கப்பலில் இருந்ததில் காணாமல் போனதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment