ஹிஜாஸின் பிணை தொடர்பில் நவம்பரில் பரிசீலனை - sonakar.com

Post Top Ad

Wednesday 23 September 2020

ஹிஜாஸின் பிணை தொடர்பில் நவம்பரில் பரிசீலனை



ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான விசாரணையடிப்படையில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விடம் தமது அடிப்படை விசாரணைகளை நிறைவு செய்துவிட்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர் குற்றப்புலனாய்வு பிரிவினர்.


எனினும், அவர் மீதான நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் அபிப்பிராயம் அறிவதற்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹிஜாஸின் தடுப்புக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 23ம் திகதி அவரது பிணை குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment