சொக்கா மல்லியின் ஆதரவாளர்கள் பாற்சோறு கொண்டாட்டம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 8 September 2020

சொக்கா மல்லியின் ஆதரவாளர்கள் பாற்சோறு கொண்டாட்டம்!

தற்போது நாடாளுமன்றம் சென்று, தனது பதவிப் பிரமாணத்துக்காக காத்திருக்கும் சொக்காமல்லியென அறியப்படும் பிறேமலால் ஜயசேகரவின் ஆதரவாளர்கள் வீதியில் பாற்சோறு வழங்கி கொண்டாடியுள்ளனர்.


இரத்னபுர மாவட்டத்தில் தேர்தலில் வென்றிருந்த போதிலும் கடந்த வருடமே மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த சொக்கமல்லிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.


எனினும், நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment