தேர்தலோடு நிமோணியா முடிந்து கொரோனா வந்து விட்டது: அசாத் - sonakar.com

Post Top Ad

Sunday 23 August 2020

தேர்தலோடு நிமோணியா முடிந்து கொரோனா வந்து விட்டது: அசாத்


தேர்தல் காலம் வரை உயிரிழந்த பெரும்பாலானோருக்கு நிமோணியா தாக்கமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா மரணங்கள் ஆரம்பமாகியுள்ளது என தெரிவிக்கிறார் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி.


தேர்தல் காலத்தில் எதுவித கொரோனா மரணமும் பதிவாகாத நிலையில் பெரும்பாலான உடலங்கள் உறவினர்களிடமே கையளிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில், நேற்றைய தினம் மரணித்த முஸ்லிம் பெண்ணுக்கு கொரோனா தாக்கமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலமும் அடக்கத்துக்காக வழங்க மறுக்கப்பட்டுள்ள நிலையில் அசாத் சாலி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment