மைத்ரிக்கு ஜனாதிபதியாக வழிவிட்டது நான் தான்: நிமல் - sonakar.com

Post Top Ad

Wednesday 29 July 2020

மைத்ரிக்கு ஜனாதிபதியாக வழிவிட்டது நான் தான்: நிமல்


2015 பொதுத் தேர்தலில் தன்னையே பொது வேட்பாளராக அறிவிக்க இருந்ததாகவும் தானே அதை மைத்ரிபால சிறிசேனவுக்கு விட்டுக்கொடுத்ததாகவும் தெரிவிக்கிறார் நிமல் சிறிபால டி சில்வா.

தனக்கு வந்த அழைப்பை நிராகரித்ததனாலேயே மைத்ரிக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததெனவும் பதுளையில் வைத்து தேர்தல் பிரச்சாரத்தின் போது நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில், கடந்த தேர்தலில் தான் விட்டுக் கொடுத்ததாலேயே மஹிந்த பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிந்தது எனவும் நிமல் தெரிவித்து வந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment