சுதந்திரக் கட்சியோடு மீள இணைவது நடக்காது: நாமல் - sonakar.com

Post Top Ad

Wednesday 15 July 2020

சுதந்திரக் கட்சியோடு மீள இணைவது நடக்காது: நாமல்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி பொதுஜன பெரமுனவை உருவாக்கியது மீண்டும் சுதந்திரக் கட்சியோடு இணைவதற்காகவல்ல எனவும் அது ஒரு போதும் நடக்காது எனவும் தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.

சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவிக்கு மஹிந்த மீண்டும் வரக்கூடும் என அண்மையில் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்குமுகமாகவே நாமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெரமுன என்ற கட்சியே இனி எதிர்காலம் எனவும் நாமல் திட்டவட்டமாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment