நான் செய்ததை மஹிந்தானந்தவும் செய்யலாமே? ஹரின் கேள்வி - sonakar.com

Post Top Ad

Saturday 20 June 2020

நான் செய்ததை மஹிந்தானந்தவும் செய்யலாமே? ஹரின் கேள்வி

https://www.photojoiner.net/image/PG8MW5tN

ஆட்ட நிர்ணய ஊழல் தொடர்பில் முன்னர் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலுக்கு நான் அமைச்சராக இருந்த போது முறையிட்டிருக்கிறேன். அதே போன்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவும் நேரடியாக இவ்வாறு ஒரு முறைப்பாட்டை பதிவு செய்யலாமே? என கேள்வியெழுப்பியுள்ளார் ஹரின் பெர்னான்டோ.

2011 கிரிக்கட் உலக கிண்ண இறுதி போட்டி பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு விட்டதாக பொதுத் தளத்தில் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளதன் பின்னணியிலேயே ஹரின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரவிந்த டி சில்வாவும், மஹிந்தானந்த 9 வருடத்துக்குப் பின் இவ்வாறு பேசுவதைத் தவிர்த்து நேரடியாக சர்வதேச கிரிக்கட் கவுன்சிலில் முறையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment