ஞாயிறு மற்றும் திங்கள் நாடளாவிய ஊரடங்கு! - sonakar.com

Post Top Ad

Friday 22 May 2020

ஞாயிறு மற்றும் திங்கள் நாடளாவிய ஊரடங்கு!


எதிர்வரும் ஞாயிறு 24 மற்றும் திங்கள் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையைக் கொண்டு வருவதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் ஏனைய மாவட்டங்களுக்கு 26ம் திகதி காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணிவரை ஊரடங்கு நீக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜுன் 20ம் திகதி தேர்தலை எதிர்பார்த்து ஊரடங்குகள் தளர்த்தப்பட்டடதாக நம்பப்படுகின்ற நிலையில்  தற்போது இதற்கெதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment