இலங்கை ஊடாக கடத்த வைத்திருந்த போதைப் பொருள் பறிமுதல் - sonakar.com

Post Top Ad

Saturday 23 May 2020

இலங்கை ஊடாக கடத்த வைத்திருந்த போதைப் பொருள் பறிமுதல்


இலங்கை ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைத்திருந்த பெருந்தொகை போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் தமிழ்நாடு பொலிசார்.

தென்னிந்தியா, இராமநாதபுரத்தில் மடக்கப்பட்டுள்ள இப்போதைப் பொருள் தொகையின் இந்திய நாணயப் பெறுமதி 10 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

2009 யுத்த நிறைவின் பின் இலங்கை ஒரு போதைப் பொருள் கடத்தல் மையமாக உருவெடுத்துள்ளதாக ஹர்ஷ டி சில்வா கடந்த ஆட்சியின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment