நாடு திரும்பத் தவிக்கும் 38,983 இலங்கையர்! - sonakar.com

Post Top Ad

Sunday 17 May 2020

நாடு திரும்பத் தவிக்கும் 38,983 இலங்கையர்!


கொரோனா சூழ்நிலையில் வெளிநாடுகளில் முடங்கியுள்ள 38,983 இலங்கையர் நாடு திரும்புவதற்கான வழிகளுக்காகக் காத்திருப்பதாக தெரிவிக்கிறது வெளியுறவுத்துறை அமைச்சு.

அண்மையில் வெளிவிவகார அமைச்சு உருவாக்கியிருந்த இணையம் ஊடாக இவ்வாறு தகவல் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 143 நாடுகளில் மாணவர்கள், தொழில் நிமித்தம் சென்றவர்கள் மற்றும் சுற்றுலா விசாவில் சென்றவர்கள் இவ்வாறு பதிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 15 நாடுகளிலிருந்து இதுவரை 3600 பேர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment