அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது: அடம்பிடிக்கும் JMO - sonakar.com

Post Top Ad

Monday 13 April 2020

அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது: அடம்பிடிக்கும் JMO



கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலங்களை எரிப்பதற்கு மாத்திரமே அனுமதிப்பதென கடந்த 31ம் திகதி அரசாங்கம் முடிவெடுத்திருந்ததுடன் இதுவரை ஏழு பேரது உடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.



இந்நிலையில், முஸ்லிம் தரப்பினரால் தொடர்ந்தும் ஜனாஸாக்களை அடக்குவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவை முஸ்லிம் சமூகப் பிரமுகர்கள் சந்தித்திருந்த விபரத்தினை நேற்றைய தினம் சோனகர்.கொம் வெளியிட்டிருந்தது. 

இதன் தொடர்ச்சியில், சுகாதார பணிப்பாளரின் தலைமையில் சட்ட மருத்துவ அதிகாரிகளுடன் (JMO) இடம்பெற்ற மேலதிக சந்திப்பு இன்று தீர்வின்றி முடிவுற்றுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலினை பின்பற்ற வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இல்லையென தெரிவித்துள்ள சட்ட மருத்துவ அதிகாரிகள், இலங்கையில் இது தொடர்பில் சுயாதீனமாகவே முடிவெடுக்கப்படும் என தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர். 

இலங்கை தவிர ஏனைய அனைத்து நாடுகளிலும் உடலங்களை புதைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இங்கு மாத்திரம் இது அரசியலாக்கப்பட்டிருப்பதாக இது தொடர்பில் சோனகர்.கொம்முக்கு கருத்து வெளியிட்ட (பெயர் குறிப்பிட விரும்பாத) முன்னாள் அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

ராஜா said...

அரசியல்

Post a Comment