இலங்கையில் கொரோனா அபாயம் முடிந்து விட்டதாக நம்புவது தவறு என தெரிவிக்கிறார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் மருத்துவர் நவின் சொய்சா.
கொரோனா தொற்றுக்குள்ளாகியும் நோய் அறிகுறிகள் வெளிப்படாத ஆயிரக்கணக்கானோர் இருக்கக் கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ந்து தெரிவித்து வருவதோடு இவ்வாறானவர்கள் ஊடாகவும் கொரோனா வைரஸ் ஏனையோருக்கு தொற்றும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், இவ்வாறானவர்களையும் முழுமையாகத் தேடிக் கண்டுபிடித்து அதற்குரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமல் கொரோனா அபாயம் தணிந்து விட்டதாகக் கருதுவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment