வெலிகம, தெஹிபிட்டி பகுதியில் வசித்து வந்த கடற்படை சிப்பாய், வாள்வெட்டு சம்பவம் ஒன்றின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விடுமுறையில் வந்திருந்த நபர், காணித்தகராறு ஒன்றில் பிறிதொரு நபரை வாளால் வெட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் கொழும்பு கடற்படை தலைமையகத்தில் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment