இறந்த உடல் உயிரியல் ஆயுதமாகிவிடும்: இலங்கை மருத்துவரின் புதிய விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Thursday 16 April 2020

இறந்த உடல் உயிரியல் ஆயுதமாகிவிடும்: இலங்கை மருத்துவரின் புதிய விளக்கம்!


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடலைக் கட்டாயம் எரித்தே ஆக வேண்டும் என இலங்கையில் முடிவெடுக்கப்பட்டதன் பின்னணி, அவ்வுடல் உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சம் என இலங்கை சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரி புதிதாக தெரிவித்துள்ளார்.



உடலங்களைப் புதைப்பதற்கான அனுமதியைப் பெற தொடர்ந்தும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த கூட்டத்தில் மருத்துவர் சன்ன பெரேரா என்பவர் ஆணித்தரமாக அதனை மறுத்துரைத்திருந்தார். இந்நிலையில் குறித்த நபர் பிபிசி வானொலியினால் இது தொடர்பில் வினவப்பட்டிருந்த நிலையிலேயே தமக்கு முஸ்லிம்களோடு எந்தக் கோபமும் இல்லை, ஆனால் இறந்தவரின் உடலை யாராவது உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தி விடக்கூடும் என்பதாலேயே எரிப்பது கட்டாயம் என விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்தும் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வொன்றைக் காண முயற்சிகள் இடம்பெற்று வருவதாக சமூகப் பிரமுகர்கள் சோனகர்.கொம்முக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment