கொரோனா அபாய சூழ்நிலையில் தேர்தலை நடாத்துவதற்கு அவசரம் காட்ட வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குமாறும் அவசரப்பட்டு தேர்தலை அவசரப்பட்டு அறிவிக்க வேண்டாம் எனவும் அவர் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் கொரோனா அபாயம் அகன்றுவிட்டதாக அறிவித்து, தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய அரசு முனைவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment