பூசா முகாமில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதியொருவர் தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபருக்கு கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடாத்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு பாதிப்பில்லையெனவே முடிவாகியுள்ளது.
எனினும், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை பரிசோதிக்கும் வார்டில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் இன்று மாலை தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment