சாம்பலை கையளிக்கலாம்; அரசாங்கம் வர்த்தமானியூடாக அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday 12 April 2020

சாம்பலை கையளிக்கலாம்; அரசாங்கம் வர்த்தமானியூடாக அறிவிப்பு


கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் உடலங்களை எரிப்பது மாத்திரமே அனுமதிக்கப்படும் என அரசாங்கம் கடந்த மார்ச் 31ம் திகதி தீர்மானித்திருந்தது.


எனினும், எரித்த பின்னர் சாம்பலையாவது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பல மட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கான அனுமதியை உத்தியோகபூர்வ ரீதியாக 11ம் திகதியிட்ட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது அரசாங்கம்.

இப்பின்னணியில் இனி வரும் காலங்களில் எரிக்கப்படும் உடலங்களின் சாம்பல் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment