இலங்கையில் சமூக மட்டத்தில் குறைந்த அளவிலேயே கொரோனா தொற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார் சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க.
நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டதில் பெரும்பாலான (12) வைரஸ் தொற்று வட மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் விளக்கியுள்ள அவர், சமூக மட்டத்தில் குறைந்த அளவிலேயே பரவல் இடம்பெறுவதாகவும் அண்மையில் கண்டறியப்பட்டவர்களின் உடலில் குறைந்தளவு வைரஸ் தாக்கமே இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இதுவரை 63 பேர் வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment