இத்தாலிலியிலிருந்து நாடு திரும்பியிருந்த மகன் ஊடாக கொரோனா தொற்றுக்குள்ளான இந்தியா, கேரளாவைச் சேர்ந்த 93 மற்றும் 88 வயது கணவன் - மனைவி கொரோனா பாதிப்பிலிருந்து முற்றாக குணமடைந்துள்ளனர்.
கோட்டயம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த தம்பதியினர் பாதிப்பிலிருந்து முழுமையான மீண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோரே பெருமளவில் பாதிக்கப்பட்டும் உயிரிழந்துமுள்ள நிலையில் குறித்த தம்பதியினர் மீண்டு வந்துள்ளமை கேரளாவில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
No comments:
Post a Comment